IPL 2025 | புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி வெளியேற்றம் !

மழை காரணமாக, பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறீயது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஒரு வாரம் கழித்து, நேற்று போட்டிகள் மீண்டும் தொடங்க இருந்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதன்பிறகும் மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts