இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் …புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குசந்தை !

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்திய பங்குகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இரு தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் காணப்பட்டு வந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்றனர்.

இதனால், பங்குச்சந்தை வர்த்தகம் மந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வர்த்தகத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

அதன்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2, 172 புள்ளிகள் அதிகரித்து 81,627 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 672 புள்ளிகள் அதிகரித்து 24,680 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.

எச்..எப்.சி.எல்.,எஸ்கார்ட்ஸ் குபோடா, இன்டர்குளோப் ஏவியஷன் லிமிடெட், எம்.சி.எக்ஸ்., இண்டியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வை கண்டுள்ளன

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts