முத்தரப்பு ஒருநாள் இறுதிப்போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி !

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடின.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா, 101 பந்துகளில் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹர்லின் தியோல் 47 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களும், ஹர்மன்பிரீத் கௌர் 41 ரன்களும் எடுத்தனர்

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts