இடுக்கி | இறகு நீர்வீழ்ச்சியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இளைஞர் மீட்பு !

இடுக்கியில் இறகு நீர்வீழ்ச்சியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இறகு நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.

அப்போது, அங்கிருந்த பாறையின் இடையே இளைஞர் மாட்டிக்கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் கயிற்றின் உதவியுடன் அந்த இளைஞரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

கரைக்கு மீட்கப்பட்ட இளைஞர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் , கேரளாவிற்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், இறகு நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை உள்ளூர் மக்கள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts