ஐ.பி.எல் 61 வது போட்டியில் அதிரடியாக விளையாடி ஐதராபாத் அணி வெற்றி !

நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஐதராபாத் அணி, அபார வெற்றிபெற்றதுடன் லக்னோ அணியை பிளேஆப் சுற்றிலிருந்து வெளியேற்றியது.

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இப்போட்டியில் தோல்வி முடிந்ததன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பபை இழந்து லக்னோ வெளியேறியது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts