சத்தீஸ்கரில் கனரக வாகனத்தின் மீது மினி லாரி மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு !

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சட்டவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ராய்ப்பூர்- பலோதாபஜார் சாலையில் உள்ள பனார்சி கிராமத்தில் திருமண விழாவில் கலந்துகொண்டு, மினி லாரியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே அதிவேகமாக வந்த கனரக சரக்கு வாகனம் மீது மினி லாரி மோதி விபத்திக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் வந்த குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கரௌரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.