ஈரோட்டில் பாட்டி பேரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு !

சத்தியமங்கலம் அருகே பாட்டியும், பேரனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தொட்டகாஜனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா, அவரது மனைவி தொட்டம்மா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களது மகன் ராகவன் சூசையபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், ராகவன் தனது வீட்டை ஒட்டியுள்ள பாட்டி சிக்கமா வீட்டில் இரவு நேரத்தில் அவ்வப்போது உறங்கச் செல்வது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் ராகவன் நேற்று இரவு தனது பாட்டி சிக்கமா வீட்டிற்கு உறங்கச் சென்றுள்ளார்.

பின்னர், காலை சிக்கம்மா வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ராகவன் தந்தை கதவை உடைத்து பார்த்தபோது சிக்கம்மா மற்றும் சிறுவன் ராகவன் இருவரும் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தாளவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி காவல் துறையினர் சடலங்கலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாட்டியும் பேரனும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு உள்ள கைரேகைகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.