இனி, மாதம் ஒரு ராக்கெட் ஏவும் திட்டம் – இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் !

இனி, மாதம் ஒரு ராக்கெட் ஏவும் திட்டம் முன்னெடுக்கப்படும் என இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவர், பிஎஸ்எல்வி சி 61 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடவைக் கண்டறிய ஒரு குழுவை அமைத்துள்ளோம் என்றும் அதன் அடிப்படையில் வருங்காலத்தில் இப்பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும் என்றும் கூறினார்.

அதோடு, ஒவ்வொரு மாதமும் ஒரு ராக்கெட் வீதம் இன்னமும் 13 ராக்கெட்டுகளை தொடா்ச்சியாக விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக்வும் விண்வெளி ஆய்வை திறம்பட மேற்கொள்வதற்கான அனைத்து ஆராய்ச்சி திட்டங்களையும் இஸ்ரோ முன்னெடுத்து வருவதாகவும் நாராயணன் அப்போது தெரிவித்தார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts