மேட்டுப்பாளையம்|தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டி யானை -தாயிடமே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் !

மேட்டுப்பாளையம் அருகே, தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை, தாயிடமே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானி சாகர் நீர்த்தேக்க பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது தாயை பிரிந்த நிலையில் யானை குட்டியை பார்த்து மீட்டனர்.
மீட்கப்பட்ட யானைக்கு ஒன்பது மாதமே இருக்கும் என்ற நிலையில் அந்த குட்டியை அதன் தாயுடன் சேர்த்து வைக்க தாய் யானை கூட்டத்தை சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்ட குட்டி யானை, உடல் சோர்வுடன் காணப்பட்ட நிலையில் யானைக்கு, மருத்துவ குழுவினர் குளுக்கோஸ் மற்றும் இளநீர் இதர புரதச்சத்துக்கள் வழங்கி வருகின்றனர்.
ஒருபுறம் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில், தனி குழுக்கள் அமைத்து தாய் யானையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.