மீண்டும் தொடங்கியது அட்டாரி – வாகா எல்லை கொடியிறக்க நிகழ்வு !

போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி – வாகா எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று துவங்கியது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதி தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானுக்குள் புகுந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் நிலவி வந்தது.
இதனால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி – வாகா, ஹுசைன்வாலா மற்றும் சட்கி எல்லைகளில் கொடியிறக்க நிகழ்வு நிறுத்தப்பட்டது.

தற்போது இரு நாடுகளும் மோதலை நிறுத்தியுள்ள நிலையில், நேற்றுமுதல் மீண்டும் எல்லையில் கொடியிறக்க நிகழ்வு நடைபெற்றது.
ஆனால், கொடியிறக்க நிகழ்வில் எல்லைக் கதவுகள் திறக்கப்படாது என்றும், பாகிஸ்தான் வீரருடன் இந்திய வீரர் கைக்குலுக்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.