மதுரையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர் – அதிரடி காட்டும் போலீசார் !

மதுரையில் ரவுடி சுபாஷ் சந்திர போஸ் போலீசின் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மதுரையில் கிளாமர் காளி என்பவர் கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக் காளியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தக் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி சுபாஷ் சந்திர போஸை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காரில் சென்ற சுபாஷ் சந்திரபோஸ், மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள வாகன சோதனையில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் சுபாஸ் சந்திர போஸை துரத்தி சென்று பிடிக்க முயன்றபோது, காவல்துறையினரை துப்பாக்கியாலும் கத்தியாலும் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பதிலுக்கு காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ரவுடி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார்.

இந்த என்கவுண்ட்டர் நடவடிக்கையில் காவல்துறையினர் 2 பேர் காயமடைந்தனர். மதுரையில் ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts