ஈரோடு| முதிய தம்பதி கொலை வழக்கு-மேலும் ஒரு நபரை போலீசார் கைது!

ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும், ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி அவரது மனைவி பாக்கியம். விவசாயிகளான இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மே 1ஆம் தேதி இரவு ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நகைக்காக கணவன் மனைவி என இருவரும் அடித்து கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க 12 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் நேற்று ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன