ஜப்பானை உலுக்க இருக்கும் நிலநடுக்கம் -பகிர் தகவல் உள்ளே !

ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலகின் பால்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில்,கடந்த மார்ச் 28 ஆம் தேதி தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் மணல் போல் சரிந்து விழுந்தனர்.இந்த நிலையில்,

ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும்,இந்த நிலநடுக்கம் யாரும் எதிர்பார்த்திடாத பேரழிவுகளைத் தரும், சுனாமிகளைத் தூண்டக்கூடும் என்றும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழும் என்றும் ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி,இந்தப் பேரழிவால் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியாக 270.3 டிரில்லியன் யென் அல்லது எதிர்பார்க்கப்படும் பொருளாதார சேதம், முந்தைய மதிப்பீடான 214.2 டிரில்லியன் யென்களைவிட அதிகரித்துள்ளது.

உலகின் மிக அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். இந்த நிலையில், இங்கு, 8 முதல் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான 80% வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts