திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார் மீது அவதூறு -சீமானின் மீது மானநஷ்ட வழக்கு பதிவு !

திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார் மீது அவதூறு பரப்பியதற்காக, சீமான் மீது ரூ. 2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, டி.ஐ.ஜி வருண் குமார் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர்.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதற்காக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய வருண்குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், ஐ.பி.எஸ் அதிகாரி மீது அவதூறு பரப்பியதற்காக, சீமான் மீது ரூ. 2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறினார்