இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா தொற்று பாதிப்பு !

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் கொரனோ பெருந்தொற்று சுமார் 3 ஆண்டுகளுக்கு நாட்டையே நிலைகுலையச் செய்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

அதன்படி, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலத்தில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர் .

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts