பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் -வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீறி பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதேவேளை, இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக […]

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு !

காசா முனையில் இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி […]

உலக பூமி தினத்தை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை !

உலக பூமி தினம் (ஏப்ரல் 22 ) முன்னிட்டு சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ”இன்று உலக பூமி தினம். இந்த பூமி நம் அனைவரையும் தாங்கி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனை கோடி மக்களின் வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. இன்றைக்கு நாம் காணும் நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு, எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிப்பது, குளங்களில் சாக்கடை நீர் கலப்பது, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன நீர் போன்றவை […]

கத்தோலிக்க திருச்சபை திருத்தந்தை போப் பிரான்சிஸ் காலமானார் !

கத்தோலிக்க திருச்சபை தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ்.இவர் கடந்த மாதம் 14 அம் தேதி, உடல்நலக்குறைவால் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் போப் பிரான்சிஸுக்கு 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. 38 நாள்களுக்குப் […]

உலக சுகாதார உச்சி மாநாட்டை கலக்கி வரும் தமிழக இளைஞர் ஹரிச்சந்திரன் !

புது தில்லியில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டத்தில் அடிமட்ட மக்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்நாட்டின் ஹரிச்சந்திரன் செயல்பட்டு வருகிறார். உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டம் 2025 வருகின்ற ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், உலகளாவிய மற்றும் தேசியத் தலைவர்களை ஒன்றிணைத்து, மிகவும் அவசரமான சுகாதார சவால்களில் ஒன்றை குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான […]

ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் !

ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 4.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளன.நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகரமான டெல்லி உள்பட வட இந்தியாவின் […]

நியூயார்க் |சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விபத்து !

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதை பற்றி நியூயார்க் மேயர் தெரிவிக்கையில்,உயிரிழந்தவர்களில் ஸ்பெயினிலிருந்து வருகை தந்த ஒரு விமானி மற்றும் ஒரு குடும்பத்தினர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த […]

உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தொகையும் அரசு ஊழியர்களின் விவரமும் !

உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஊழியர்களில் நிர்ணயிக்கும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளார். அரசு துறைகளில் தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் இருப்பதாகக் கூறி, அவர்களைக் குறைக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி அதிக மக்கள் தொகைக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக அரசு ஊழியர்களைக் கொண்டிருக்கும் நாடான ஆஸ்திரேலியாவில்,1,000 மக்களுக்கு 143 அரசு ஊழியர்கள் நிர்னையித்துள்ளனர்.மேலும்,அந்நாட்டின் மொத்த அரசு ஊழியர்களில் 29 சதவீதம் பேர் அரசு ஊழியர்களாக உள்ளனர் […]

தைவான் நாட்டில் நிலநடுக்கம் அதிர்ச்சியில் மக்கள் !

தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தி கட்டிடங்கள் அதிர்ந்ததில் மக்கள் அச்சமடைந்தனர். தைவான் நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரை நகரான இலன் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலன் நகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் 69 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சில விநாடிகள் அதிர்ந்தன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு […]

16 வயதுக்குட்டப்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தடை – அதிரடி காட்டும் மெட்டா !

பெற்றோர் அனுமதி வழங்காவிட்டால், 16 வயதுக்குட்டப்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ் அப், த்ரெட் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் இயங்குகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் மெட்டா செயலிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருகின்றனர். அந்த வகையில் தற்போது 16 வயதுக்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் நிர்வாணத்தை நேரடியாக ஒளிபரப்பவோ அல்லது மங்கலாக்கவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் கீழ், பெற்றோர் அனுமதி வழங்காவிட்டால், 16 வயதுக்குட்டப்பட்டவர்கள் […]