மதுரை அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியது வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் !

புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சியாக மதுரையில் உள்ள அப்போலோ கேன்சர் மையம், வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டத்தை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, வாய்ப் புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புகையிலை பயன்பாட்டின் உடல்நல பாதிப்புகளையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் பிரச்சாரத்தை மதுரை அப்போலோ மருத்துவமனை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய அந்த மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கே. பாலு மகேந்திரா, டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன் […]

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் […]

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு காய்ச்சலால்-சுகாதாரத்துறை அறிவிப்பு !

தமிழகத்தில், கடந்த ஐந்து மாதங்களில் 7,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்எஜிப்ட் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். […]

கோவை அருகே, வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து !

கோவை அருகே, வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் கோவை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணி புரியும் பிரவீன் என்பவரும் வசித்து வருகிறார். […]

முறையாக செயல்படாத நெல் கொள்முதல் நிலையம் -விவசாயிகள் வேதனை!

பெரியபாளையம் அருகே, நெல் கொள்முதல் நிலையம் முறையாக செயல்படாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, ஆவாஜிப்பேட்டையில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்றுள்ளனர். போதிய இடவசதி, […]

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு | குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை – மகளிர் நீதிமன்றம் அதிரடி !

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

மதுரையில் இன்று நடைபெறுகிறது திமுக பொதுக்குழு கூட்டம் !

2026 தேர்தலை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது . தமிழகத்தின் முதல்வரும் திமுக கட்சியின் தலைவரும் ஆன மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஜுன்1 மதுரையில் மாபெரும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . 2026 தேர்தலை முன்னிட்டு […]

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு -விவசாயிகள் மகிழ்ச்சி!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து124 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில், முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா – தமிழக மேற்கு தொடர்ச்சி […]

அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் – மலைவாழ் மக்கள் கோரிக்கை!

அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் என, கொடைக்கானல் தோடர் இன மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 62வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கொடைக்கானல் பூம்பாறை சஷ்டி புகழ் சார்பாக மலைவாழ் மக்களின் தோடர் நடனம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் இந்த நடனத்தை, தங்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆடி வருகின்றனர். ஆடி மாதங்களில் நடவு செய்து விவசாயத்தில் ஈடுபடும்போது இந்த நடனத்தை அவர்கள் ஆடுவது […]

மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் -பிரேமலதா விஜயகாந்த்!

‘மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறிய அவர், சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக […]