உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் -தமிழ்நாடு அரசு !
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 16ம் தேதியன்று தமிழ்நாட்டின் 14 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்றப்பட உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்துடன் குற்ற […]
விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிப்பு தகவல் உண்மையில்லை -ஒன்றிய அரசு விளக்கம்!
விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று, ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு ஒன்றிய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது மொத்த நிலத்தடி […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு -கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 78ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 73,452கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் 117.39 அடியை எட்டியுள்ள நிலையில், விரைவில் அணை நிரம்பி உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி முதல் […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று […]
கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்!
கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயில் வழக்கப்படி தனது குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் தங்கள் குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும் என்றும், அந்த வகையில் ஈரோடு பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் மகா பெரிய குண்டம் விழாவில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். […]
345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையை தொடங்கிய இந்திய தேர்தல் ஆணையம் !
கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800-க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இவற்றில் பல இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 345 அரசியல் […]
சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை வடமாநில இளைஞர் ஒருவர் கைது !
சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்துவரும் 20 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 7:30 மணி அளவில் தனது கல்லூரி வளாகத்தில் உள்ள ஃபுட் கோர்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த மாணவி செல்லும் வழியில் வந்த ஒரு நபர் கையில் கட்டையை வைத்துக் கொண்டு மாணவியிடம் செல்ஃபோன் எண்ணை கேட்டு முடியை பிடித்து […]
சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!
சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்ட நெருக்கடியால் மாணவ மாணவியர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம் என்றும், சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளதாகவும், ஆகவே, மாணவ மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி […]
தென்காசி குற்றால அருவியில் குளிக்க தடை !
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றால பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, நேற்று மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரவும் பெய்த தொடர் மழையால் மற்ற அருவிகளான புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் […]
கிண்டி ரேஸ் கிளப்பிடம் பசுமை பூங்கா அமைக்க-தமிழ்நாடு அரசு டெண்டர்!
கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்க. விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், ‘வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை […]