எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது !
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 14பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையும் அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளனர். காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் விசாரணைக்குப் பிறகு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் […]
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை குற்றவாளி ராஜுவுக்கு நாட்கள் காவல் விசாரணை -போக்சோ நீதிமன்றம்!
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், 14 நாட்களுக்கு பின் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு […]
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு !
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 1.15 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து […]
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு -தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி – மத பாகுபாடுகளுடன் நடந்துகொள்கிறார் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். இதனையடுத்து நீதிபதி சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பு விராணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதனின் […]
நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை !
நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர்-செல்வி தம்பதியினரின் மகன் கவின். இவர், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த இளைஞர் நெல்லை கேடிசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளி தோழியுடன் பழகி வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. […]
தமிழகத்தில் நாளையும் நாளை மறுநாளும் கன மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!
நாளை மற்றும் நாளைமறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 30 முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை […]
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ..5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும், முல்லை பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகைஅணையின் நீர்மட்டம் 58 அடியிலிருந்து 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னை அப்பலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும்வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அதேசமயம் உறுப்பினர் சேர்க்கையில் […]
திருவள்ளூர் சிறுமி பாலியல் குற்றவாளி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல் !
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்று காவல்துறை தகவல் அளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி 8 வயது சிறுமி பள்ளி முடிந்து தனது பாட்டியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரையே பின்தொடர்ந்து வந்த வடமாநில இளைஞர், அந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. […]
தருமபுரியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து !
தருமபுரி அருகே வீட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த உழவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 4 வயதில் அர்திகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் தினமும் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை சாலையோரத்தில் உள்ள நரசிம்மன், சோனியா தம்பதியரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. […]