தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி அதிகரிக்க கூடும் – சென்னை வானிலை மையம்!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் […]

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் !

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி என்ற முதியவர், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதால், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. […]

விஜய பிரபாகரனை எதிர்பார்க்கும் தமிழக மக்கள் ..!

தமிழ் நாட்டின் அரசியல் தற்போது உள்ள சூழலில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு இளைஞராக விஜயபிரபாகரன் திகழ்ந்து வருகிறார் 2005 அரசியலில் தனது பயணத்தை துவங்கிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை தமிழகத்தில் தொடங்கினார்.தொடர்ந்து 15 வருடங்களாக எதிர்கட்சிகளுக்கு பெரிய சவாலாக திகழ்ந்தார் . அதுமட்டுமின்றி,தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களில் அறிவிப்புகளும் ,நலத்திட்ட பணிகளும் ,அவரது செயல்பாடுகளும் மக்களால் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.2011 ஆம் ஆண்டு அனைத்திந்திய […]

ஏப்ரல் 23 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் ஏப்ரல் 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

உலக பாரம்பரிய தினம் மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களுக்கு இன்று இலவச அனுமதி !

உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படுகிறது. உலகில் உள்ள பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. நுழைவுக் […]

அச்சத்தோடு இருக்கும் பெண்களை ஆதரிக்க பிறந்தவள் பிரேமலதா விஜயகாந்த் – தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழாரம் !

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்திய அரசியளிலும் அசைக்க முடியாத பெண் சக்தி பிரேமலதா விஜயகாந்த் என தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை கண்ணன் ஐய்யா அவர்கள் இந்திய இலக்கிய வரலாற்றில் தமிழ்க்கடல், பேச்சாளர் , பட்டிமன்ற நடுவர் போன்ற பல்வேறு புகழுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர்.இவர் 2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக மேலப்பாளையத்தில் (திருநெல்வேலி) ,நடைபெற்ற மாநாட்டில் பேசி […]

நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல் !

நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி சற்றுமுன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,”கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் வரும் மே 19ஆம் தேதி மீண்டும் நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப […]

கவனம் பெற்று வரும் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை !

தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் மக்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. டிஜிட்டல் வாயிலாகவும் தங்களது பதிவுகளை பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த உறுப்பினர் சேர்க்கை இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, முதல்முறை வாக்காளர்கள்,பெண்கள் மற்றும் இளைஞர்கள் யாவரும் உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026 தேர்தல் பணிகளை தற்போது தேமுதிக உறுப்பினர் சேர்க்கை துவங்கிய ஒரு […]

தமிழகத்தில் 3 தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்க கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் […]

உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி உடனடியாக அமல்படுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் !

உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டி சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிறுவனம், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இந்த நிறுவனத்திற்கு ஒப்படைத்ததன் காரணமாக, விரிவாக்கம் செய்து உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களில் 60% தொழிலாளர்கள் […]