சத்தீஸ்கரில் கனரக வாகனத்தின் மீது மினி லாரி மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு !
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ராய்ப்பூர்- பலோதாபஜார் சாலையில் உள்ள பனார்சி கிராமத்தில் திருமண விழாவில் கலந்துகொண்டு, மினி லாரியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த கனரக சரக்கு வாகனம் மீது மினி லாரி மோதி விபத்திக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் வந்த குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த […]
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் …புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குசந்தை !
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்திய பங்குகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இரு தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் காணப்பட்டு வந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்றனர். இதனால், பங்குச்சந்தை வர்த்தகம் மந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வர்த்தகத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குகள் புதிய […]
முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை !
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள […]
ஸ்பேஸ் டாக்கிங் இணைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செய்துமுடித்தது ‘இஸ்ரோ’ !
ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் கீழ், விண்வெளியில் இரண்டாவது முறையாக செயற்கைக்கோள்களை, ‘இஸ்ரோ’ வெற்றிகரமாக இணைத்துள்ளது. வரும் 2035ம் ஆண்டுக்குள், விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக, ‘ஸ்பேடெக்ஸ்’ என்ற திட்டத்தில், விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்து விடுவிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இரண்டு செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி., சி — 60 ராக்கெட் வாயிலாக, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் […]
ஜம்மு-காஷ்மீர் |செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளபெருகில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு !
ஜம்மு-காஷ்மீரில் தரம்குண்ட் என்ற கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது.மேலும், 30 வீடுகள் சேதமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதிக்கு அருகில் இருந்த தரம்குண்ட் என்ற கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது.மேலும், 30 வீடுகள் சேதமடைந்தனர் . மேலும், கனமழை காரணமாக பாக்னா கிராமத்தில் வீடு […]
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் – மகிழ்ச்சியில் ரசிகர்கள் !
விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கேப்டன் விஜகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான 100-வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக 4கே தரம் உயர்த்தப்பட்டு விரைவில் இப்படம் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. மேலும்,கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலமாக விஜகாந்த் கேப்டன் விஜகாந்த் என்று மக்களால்செல்லமாக அழைக்கப்பட்டார். பிலிம் […]
4 கோடி ரூபாய் சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் !
பாஜக அரசு அளித்த 4 கோடி ரூபாய் பரிசை ஏற்றதற்காக, விளையாடு வீரங்கனை வினேஷ் போகத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு வினேஷ் போகத் பதிலளித்துள்ளார். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது. இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் […]
டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயலால் மக்கள் அதிர்ச்சி !
டெல்லியில் திடீரென வானிலை மாற்றமாகி புழுதிப்புயல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதுடன், பல விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. புழுதிப்புயலுடன் சேர்த்து லேசான மழையும் பெய்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பலத்த காற்றும் வீசியதால் இரவு 9 மணிவரை […]
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு !
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன்படி, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கபட்டது. இந்நிலையில், இன்று இந்திய […]
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் !
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், வயது மூப்பு காரணமாக காலமானார். 93 வயதான குமரி அனந்தன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்த பெருமைக்கு சொந்தக்காரர். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் அவர் பதவி […]