இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு !
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சென்றிருந்த பிரதமர் மோடி கொழும்பிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டின் அதிபர்அநுரா குமார திசநாயகேவை சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்னைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சு நடத்தினார். அதுமட்டுமின்றி, மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்தார். இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார். […]
FICCI-யின் இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் நியமனம் !
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் (தலைவர் & நிர்வாக இயக்குநர், இந்திரா ப்ராஜெக்ட்ஸ், சென்னை)தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் வணிக உச்சிமாநாடுகள் மற்றும் முதன்மையான தொழில் நிகழ்வுகளில் இவர் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – உச்சநீதிமன்றம் தள்ளுபடி !
13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செப் அறக்கட்டளை சார்பில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நம் நாட்டில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை கட்டுப்பாடின்றி அணுக முடிவதால், அவை குழந்தைகளிடம் முன்னெப்போதும் இல்லாத மனநல நெருக்கடியை ஏற்படுத்துகிறது […]
மாநிலங்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா !
மக்களவையைத் தொடர்ந்து, கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிராக 232 […]
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி !
இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயம்பு வாழ்க்கை பத்திக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், இமாச்சல பிரதேச தலைநகர் குல்லுவில் உள்ள குருத்வாரா மணிகரன் சாஹிப் அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]