பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணம்-கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு !
பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதையடுத்து, பெங்களூரில் ஆர்.சி.பி அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது வீரர்களைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பெங்களூர் கூட்ட நெரிசலில் […]
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – இந்தியா கூட்டணி எம்பி-க்கள் வலியுறுத்தல் !
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வேண்டும் என, இந்தியா கூட்டணி எம்பி-க்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் படுகொலைக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. இதில், ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதலில் இந்தியா எந்தளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டன என்பது குறித்து ஒன்றிய அரசிடம் முழுமையான விளக்கம் இல்லை என எதிக்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. எனவே, ஆபரேஷன் […]
நாளை கூடுகிறது ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் !
சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், நாளை, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் படுகொலைக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதலில் இந்தியா எந்தளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டன என்பது குறித்து ஒன்றிய அரசிடம் முழுமையான விளக்கம் இல்லை என எதிக்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. எனவே, ஆபரேஷன் […]
கொச்சியில் நடைபெற்ற சரக்குக் கப்பல் விபத்து பேரிடராக அறிவிப்பு -கேரள அரசு!
கொச்சி அருகே, சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது. லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று கடந்த 25ம் தேதி விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்தபோது கடலில் மூழ்கத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, கப்பலில் ஏற்றிவந்த 367 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84 மெட்ரிக் டன் […]
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகள் நிலயமானம் -திரவுபதி முர்மு உத்தரவு !
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்றத் நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் அமைப்பு கடந்த 26-ம் தேதி பரிந்துரை செய்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு செய்த இந்தப் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் […]
பறையிசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு இன்று பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிப்பு !
பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, ஒன்றிய அரசு மொத்தம் ஏழு பத்ம விபூஷன் விருதுகளையும், 19 பத்ம பூஷன் விருதுகளையும், 113 பத்மஸ்ரீ விருதுகளையும் கலைஞர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்தது. முதல் கட்டமாக, நடிகர் அஜித், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷன் உள்பட மொத்தம் 71 பேருக்கு ஏப்ரல் 28 அன்று விருதுகள் வழங்கப்பட்டன. […]
“புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததால்” நிதி ஒதுக்கப்படவில்லை -ஒன்றிய அரசு பதில் !
புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைப்பின் நிர்வாகி ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க […]
நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் !
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று மாலை பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். டெல்லி ஜன்பத்தில் உள்ள இந்த சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடனிருந்தார். இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் […]
இனி, மாதம் ஒரு ராக்கெட் ஏவும் திட்டம் – இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் !
இனி, மாதம் ஒரு ராக்கெட் ஏவும் திட்டம் முன்னெடுக்கப்படும் என இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவர், பிஎஸ்எல்வி சி 61 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடவைக் கண்டறிய ஒரு குழுவை அமைத்துள்ளோம் என்றும் அதன் அடிப்படையில் வருங்காலத்தில் இப்பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும் என்றும் கூறினார். அதோடு, ஒவ்வொரு மாதமும் ஒரு ராக்கெட் வீதம் இன்னமும் 13 ராக்கெட்டுகளை தொடா்ச்சியாக விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக்வும் விண்வெளி ஆய்வை திறம்பட மேற்கொள்வதற்கான அனைத்து […]
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று இரவும் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், […]