10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – ஜம்மு காஷ்மீரில் கொடூர விபத்து; ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவிப்பு!
ஜம்மு காஷ்மீரின் டோடா (Doda) மாவட்டத்தில் இன்று (ஜனவரி 22, 2026) அதிகாலை ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.பதேர்வா – சம்பா சாலையில் (Bhaderwah-Chamba road, Khannitop பகுதி) ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் (Army vehicle) திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. சம்பவ இடத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்; காயமடைந்த 11 […]
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: மாநிலங்களுக்கு அதிகாரிகள் நியமன உத்தரவு – டிஜிட்டல் அடிப்படையிலான புதிய தொடக்கம்!
இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தீவிர ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. இந்திய பதிவாளர் ஜெனரல் (RGI) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஜனவரி 15, 2026க்குள் கணக்கெடுப்பு அதிகாரிகளை (enumerators) மற்றும் மேற்பார்வையாளர்களை (supervisors) நியமிக்க உத்தரவிட்டுள்ளார். இது 2027 கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீடு-கணக்கெடுப்பு (house listing) பணியைச் சீரமைக்கும் நடவடிக்கையாகும். முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு, சாதிவாரி தரவுகளையும் சேர்த்து, நாட்டின் சமூக-பொருளாதார அடிப்படையை மறுவடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் அதிரடி: பல்லாரி நகை வியாபாரியிடம் 476 கிராம் மீட்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன தங்கக் கவசத்தைச் சுற்றியுள்ள முறைகேடு வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. கர்நாடகாவின் பல்லாரி (பெல்லாரி) மாவட்டத்தில் உள்ள ஒரு நகை வியாபாரியின் வீட்டிலிருந்து 476 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தங்கம் கோயிலின் மாயமான தங்கத்துடன் தொடர்புடையதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை தங்கக் கவச விவகாரம், தொழிலதிபர் விஜய் மல்லையா கேரள தேவாஸ்தான போர்ட்டுக்கு 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தத் தங்கத்தைப் பயன்படுத்தி […]
இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் பஸ் சிக்கி விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!
இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு ஏதுவாக ஒரு தனியார் பஸ் சிக்கி, அதில் பயணித்த 18 பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன, மேலும் சிலர் இன்னும் சேற்றில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தும் உள்ளார். இச்சம்பவம் மாலை 6:30 மணியளவில் ஜந்தூட்டா சட்டமன்றத் […]
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம்!
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். […]
தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை-பிரதமர் மோடி அறிவிப்பு !
தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் வணக்கம் சோழநாடு’ எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் என தெரிவித்தார் . மேலும்,சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது என்றும், சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனதாகவும் தெரிவித்தார். பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை […]
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று இரவு தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இரண்டு நாள் நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று இரவு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர், 452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் […]
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு | குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புறநகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 180 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக 12 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை விசாரணை நடத்தியது. இதில் கைது செய்யப்பட்ட 12 பேரும் […]
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3வது நாளாக போராட்டம் !
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கைவிடக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பின் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற […]
நாடாளுமன்றத்தின் இரு அவைகள் நாளை காலை வரை ஒத்திவைப்பு !
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. உடனடியாக விவாதிக்க அவைத் தலைவர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்காக நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர். ஆனால், அவை நடவடிக்கைகள் அனைத்து ஒத்திவைத்துவிட்டு […]