புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணியை துவங்கியது தேர்தல் ஆணையம்!
ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். 74 வயதான தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. […]
எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் ஒத்திவைப்பு !
எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் […]
வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்து -19 பேர் பலி !
வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம், கல்வி நிலைய வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் – 7 பிஜிஐ என்ற போர் விமானம், இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், தலைநகரான டாக்காவிற்கு வடக்கே உள்ள உத்தரா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும், விமானம் உடனடியாக தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, […]
கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார்!
கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. வி.எஸ்.அச்சுதானந்தன் ஆலப்புழாவில் உள்ள புன்னப்புராவில் 1923ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார். 4 வயதிலேயே தாயையும் 11 வயதில் தனது தந்தையையும் இழந்த அவர் 23வது வயதிலேயே புன்னப்புரா போராட்டத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவராக திகழ்ந்தார். 1938ம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்த அச்சுதானந்தன் கருத்து வேறுபாட்டால் 1940ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் […]
நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் !
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 21- ந் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஏப்ரலில் நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்குப் பதிலடியாக மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான முதல் கூட்டத் தொடா் […]
சட்டமன்ற கூட்டத் தொடரில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த மராட்டிய அமைச்சர் மாணிக் ராவ் !
மராட்டியத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரில் அம்மாநில வேளாண் துறை அமைச்சராக உள்ள மாணிக் ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சி இரண்டாக பிளவுப்பட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வைக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. […]
வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தல் – மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி !
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களை துன்புறுத்துகின்றனர் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கைது, டெல்லியில் வங்காள மக்கள் வெளியேற்றம், கூச் பெஹாரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அசாமில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தின. இதனை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கு […]
கம்போடியா மோதல் குறித்து அந்நாட்டு பிரதமர் ஹன் மானெட் பேச்சு !
கம்போடியா மோதல் சர்ச்சைக்குரிய பகுதியில் தான் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் என்று மூன்று நாடுகள் சந்தித்துவருகின்றனர். கம்போடியாவின் அண்டை நாடானா தாய்லாந்து உடன் அந்நாட்டின் உறவு கடந்த மே மாதத்திலிருந்து நீண்ட காலமாக நிகழ்ந்து வந்த எல்லைத் தகராறு மே 28 அன்று சிறு மோதலுக்கு வழிவகுத்தது. இந்த மோதல் சர்ச்சைக்குரிய பகுதியில் தான் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் என்று மூன்று நாடுகள் சந்திக்கின்றன. இந்த துப்பாக்கி சூடு சண்டையில், காம்போடியா சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். இந்த […]
இரண்டு என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம்!
இரண்டு என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்பது உறுதியாகியுள்ளது. குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார்.மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து […]
கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு தடை -பெங்களூரு நீதிமன்றம் !
கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் கருத்தைக் கண்டித்து கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. கன்னட மக்களின் உணர்ச்சிகளை கமலின் பேச்சு புண்படுத்துவதாக கர்நாடக நீதிமன்றத்தில் கன்னட அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]