அம்பத்தூரில் மாடு முட்டி முதியவர் காயம் – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு !

அம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை அம்பத்தூர் பிரித்திவிப்பாக்கம் பிரதான சாலை அப்பர் கெனால் தெரு அருகே சாலையில் சுற்றித்திரிந்த பசுமாட்டிற்கு பெண்மணி ஒருவர் தண்ணீர் வைத்த நிலையில், தண்ணீரை குடித்துவிட்டு சாலையில் நடந்து சென்ற முனுசாமி என்பவரை தூக்கி வீசியுள்ளது. இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் பொற்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என […]

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை !

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது என்றும் இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றூம் இதனால், கோயில் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு நிதி ஒதுக்கியது என்றும் இந்த நிதி முறையாக […]

“தமிழில் மட்டுமே பெயர் பலகை வைக்க வேண்டும்” – திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி !

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி – கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும். […]

ஒரே கிராமத்தை சேர்ந்த 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், குழந்தைகள் முதல் பள்ளி மாணவர்கள் வரை 50-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்தக் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். தங்கள் கிராமத்தில் முகாம் அமைத்து […]

மதுரையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர் – அதிரடி காட்டும் போலீசார் !

மதுரையில் ரவுடி சுபாஷ் சந்திர போஸ் போலீசின் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மதுரையில் கிளாமர் காளி என்பவர் கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக் காளியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி சுபாஷ் சந்திர போஸை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காரில் சென்ற சுபாஷ் சந்திரபோஸ், மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே […]

உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் !

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வார விமுறையையொட்டி உதகை தாவரவியல் பூங்காவில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதுவும் கோடைக்காலங்களில் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், உதகை அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, படகு இல்லம் ,தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களை […]