“The Tile Bros” – கோயம்புத்தூரின் பெருமையை வெளிப்படுத்தும் டைல்ஸ் நிறுவனத் தலைவர் சந்தோஷ் குமார் !
கோயம்புத்தூரின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக திகழ்ந்து வருகிறது The Tile Bros (Pride of Tiles). கோயம்புத்தூரில் தோன்றிய ஒரு சிறிய முயற்சி இன்று தேசிய அளவில் பரந்து விளங்கும் வணிகமாக வலம் வருகிறது. “The Tile Bros (Pride of Tiles)” எனும் டைல்ஸ் விற்பனை நிறுவனத்தை 2012 ஆம் ஆண்டு திரு. சந்தோஷ் குமார் அவர்கள் நிறுவினார். தொடக்கத்தில் ஒரு கிளையுடன் துவங்கிய இந்த நிறுவனம், தற்போது 1,00,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட […]
7 நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி !
7 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா உட்பட தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளமான தென்காசியில் உள்ள குற்றால அருவிகளிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடம் திரும்பி வந்தனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து உள்ளதால், குற்றாலத்தில் உள்ள […]
மேட்டுப்பாளையம்|தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டி யானை -தாயிடமே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் !
மேட்டுப்பாளையம் அருகே, தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை, தாயிடமே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானி சாகர் நீர்த்தேக்க பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது தாயை பிரிந்த நிலையில் யானை குட்டியை பார்த்து மீட்டனர். மீட்கப்பட்ட யானைக்கு ஒன்பது மாதமே இருக்கும் என்ற நிலையில் அந்த குட்டியை அதன் தாயுடன் சேர்த்து வைக்க தாய் யானை கூட்டத்தை சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக […]
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம் !
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது என்றும், இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் […]
காரைக்குடி கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டுப் போட்டி கோலாகலம்!
காரைக்குடி அருகே, கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, இலுப்பக்குடி புது குடியிருப்பு பகுதியில் உள்ள தர்ம முனிஸ்வரர் பூச்செரிதல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்த பின், வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் […]
ராமநாதபுரத்தில் பெண்குழந்தை கழுத்தை அறுத்து கொலை -ஒருவர் கைது !
பரமக்குடி அருகே, இரண்டு வயது பெண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த எமனேஸ்வரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி டெய்சி. இவர்களது பெண் குழந்தை லெமோரியாவுக்கு இரண்டரை வயதாகிறது. இவர்களது உறவினர் வடிவேல் மகன் சஞ்சய், அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை குழந்தை லெமோரியாவை சஞ்சய் அப்பகுதியிலுள்ள […]
ஈரோடு| முதிய தம்பதி கொலை வழக்கு-மேலும் ஒரு நபரை போலீசார் கைது!
ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும், ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி அவரது மனைவி பாக்கியம். விவசாயிகளான இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மே 1ஆம் தேதி இரவு ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் […]
சென்னையில் தடம்புரண்ட மின்சார ரயிலால் பயணிகள் அதிர்ச்சி !
ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை ராயபுரம் அருகே ஆவடியில் இருந்து புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 3வது பெட்டியில் இரண்டு ஜோடி சக்கரம் தடம்புரண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ […]
ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு வேளாங்கண்ணியில் கொண்டாட்டம் !
ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு பிரார்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தலமாக வேளாங்கண்ணி தேவாலயத்தில், அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று மெழுகுவர்த்திகளை கையில் […]
திருப்பத்தூர் | பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு !
பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தபேதர் முத்துசாமி தெருவைச் சேர்ந்த பாபு . இவரது மகன் ஆர்யா இவருக்கு வயது பன்னிரெண்டுஆர்யா, பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் ஆர்யா தனது சொந்த ஊரில் உள்ள தனது நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள செல்லா குட்டை ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த […]