மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளை கடித்த வெறிநாய்!
மதுரையில் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் வெறிநாய்க் கடித்து ஐந்து மாணவிகள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே கல்லூரி வளாகத்திற்குள் ஏராளமான நாய்கள் சுற்றி திரிவதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சிக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கல்லூரி வளாகத்தில் […]
தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழப்பு !
தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்பொழுது, அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ கதண்டுகள் திடீரென கலைந்து அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில், அவ்வழியாக சென்ற 5க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. இதனையடுத்து, அவர்களை அருகாமையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு […]
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கு கேட் கீப்பர் தான் காரணம் -புலனாய்வு அறிவிப்பு !
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கு கேட் கீப்பர் கேட்டை திறந்தே வைத்திருந்ததுதான் காரணம் என்று புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். முதலில் கேட் கீப்பர் அலட்சியத்தால் […]
சிவகங்கையில் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் உயிரிழப்பு !
சிவகங்கை அருகே மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவ அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி மட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பிரான்மலை, அரளிபட்டி, வேங்கைபட்டி போன்ற ஊர்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடி, கன்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். தாங்கள் கொண்டு […]
அருப்புக்கோட்டையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த கணவரால் பரபரப்பு !
குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயியான இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், ஜெயதுர்கா, ஜெயலெட்சுமி என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக, சுந்தரவேலு தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்ற சுந்தரவேலு, தன்னுடைய […]
நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம் !
கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியார் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை […]
திருப்பத்தூர் | தனியார் கல்குவாரிக்கு அபராதம் விதித்த தேவகோட்டை சார் ஆட்சியர்!
திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட மல்லாக்கோட்டை தனியார் கல்குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சார் ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மல்லாக்கோட்டை தனியார் கல் குவாரியில் கடந்த மாதம் 20 ம் தேதி, 400 அடி ஆழப் பள்ளத்தில் விதிகளை மீறி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக துளையிடும் பணி நடைபெற்றது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]
காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு !
ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானி, மொடக்குறிச்சி கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் உத்தரவுப்படி, காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதனை, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் […]
கோவில்பட்டி அருகே லார் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு !
கோவில்பட்டி அருகே லார் மீது கார் மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதியதியாக பணிபுரிந்து வரும் பூர்ன ஜெய ஆனந்த், நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர் குமார், காவலர் நவீன்குமார், ரெக்கார்டு கிளார்க் வாசு ராமசந்திரன், வழக்கறிஞர் தனஞ்செய ராமசந்திரன் ஆகியோர் திருச்செந்தூர் வந்து விட்டு, மீண்டும் தஞ்சாவூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் மதுரை பைபாஸ் ரோடு, கோவில்பட்டி […]
திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் உயிரிழப்பு !
நெல்லை மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்தாள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பதிவு செய்து ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இன்று முதல் நாளாக திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணிக்கு சென்றுள்ளார். அப்போது அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பை சரி செய்வதற்காக சுடலைமணி இறங்கியபோது […]