எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் ஒத்திவைப்பு !

எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். மேலும், இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியால் பகல் 12 மணிவரையும் பின்னர் பிற்பகல் 2 மணிவரையும் அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்ததால், நாளை காலை 11 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் எதிர்க்கட்சியினரின் அமளிக்கு இடையே பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “எதிர்க்கட்சியினர் விவாதம் நடத்த வேண்டும் என்று கோருகிறார்கள், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts