மேட்டூர் அணையின் நீர் வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு !

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 75 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 75,000 கன […]

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ..5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும், முல்லை பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகைஅணையின் நீர்மட்டம் 58 அடியிலிருந்து 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னை அப்பலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும்வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அதேசமயம் உறுப்பினர் சேர்க்கையில் […]

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று இரவு தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இரண்டு நாள் நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று இரவு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர், 452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் […]

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதலில் 32 உயிரிழப்பு !

தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளின் இடையேயும் பதற்றம் தொற்றியது. இந்நிலையில், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை மோதி கொண்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. கம்போடிய ராணுவம் நீண்டதூர […]

திருவள்ளூர் சிறுமி பாலியல் குற்றவாளி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல் !

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்று காவல்துறை தகவல் அளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி 8 வயது சிறுமி பள்ளி முடிந்து தனது பாட்டியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரையே பின்தொடர்ந்து வந்த வடமாநில இளைஞர், அந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை -மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் !Justice Center

மக்களின் வாழ்த்துகளுடன் உறுதிமொழி எடுக்கவுள்ளேன் இது இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை என்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக முன்னுறுத்திய ஆறு வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாகினா். இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த […]

ரஷியாவில் 50 பேருடன் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் மாயம் !

ரஷியாவில் 50 பேருடன் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் காணாமல் போனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவின் கிழக்குப் பகுதியில் 46 பேருடன் சென்ற சிறிய ரக விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமூர் பகுதியில் சென்றபோது, ரஷிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை, ஏஎன்-24 பயணிகள் விமானம் இழந்துவிட்டதாகவும், விமானத்துடனான தொடர்பை மீண்டும் கொண்டு வர கட்டுப்பாட்டு அறை முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, […]

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு | குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புறநகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 180 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக 12 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை விசாரணை நடத்தியது. இதில் கைது செய்யப்பட்ட 12 பேரும் […]

சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 255 ரூபாய்க்கும், சவரனுக்கு 1000 […]