திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை-ஒன்றிய சுகாதாரத்துறை !

திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்தது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டு வருவதாக தகவல் பரவியது. இந்த தகவல் மக்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த […]

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்குவதாக அறிவிப்பு !

ஜூலை 21ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்கள் மட்டும் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது எனவும் கிரண் ரிஜிஜூ மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த […]

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு !

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 8 முதல்நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 3 முதல்நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. அதன்படி கோவையின் சாத்தான்குளம், ஒத்தக்கல் மண்டபம், சேலம் பி.என். பட்டி, திருவள்ளூரில் திருமழிசை, தஞ்சாவூரில் பேராவூரணி, ஈரோட்டில் நம்பியூர், மதுரையில் வாடிப்பட்டி, கிருஷ்ணகிரியில் […]

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 5 முதல் 8-ஆம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]

மின் கட்டணத்தை உயர்த்தும் தமிழ்நாடு அரசை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!

மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதலாக நிதிச் சுமையை ஏற்படுத்துவதைக் கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த அறிக்கையில் ”நேற்று இரவிலிருந்து மின் கட்டண உயர்வு செய்துள்ளனர் என்ற செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். இது மொத்தமாக மக்களைப் பாதிக்கக் கூடிய ஒரு விஷயமா இருக்கும். எனவே அரசு மறு பரிசீலனை செய்து இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் […]

கடலில் மூழ்கும் அபாயத்தில் துவாலு தீவு -ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் அடையும் மக்கள் !

துவாலு தீவில் வசித்து வரும் மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆஸ்திரேலியா அருகிள்ள உலக வரைபடத்தில் புள்ளி போன்று தெரியக்கூடிய துவாலு என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவு இன்னும் 25 ஆண்டுகளில் கடலுக்குள் முழுமையும் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சில சின்னஞ்சிறு தீவுகள் கடலில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் துவாலு தீவில் வசித்து வரும் மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். மேலும்,இந்த தீவில் 11 ஆயிரம் […]

தமிழகத்தில் நாளை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமா தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 3 மற்றும் 4-ஆம் […]

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற தக்‌ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர்” தொடக்க விழா !

தக்‌ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தின் தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகில் ‘கபளிஹரம்’ என்ற படத்திலும், மலையாள திரையுலகில் ‘இத்திகர கொம்பன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர் தக்‌ஷன் விஜய். இவர் தற்போது “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த திரைபடத்திற்கான தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தக்‌ஷன் விஜய், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.மேலும்,தக்‌ஷன் விஜயின் எதார்த்த […]

திருவள்ளூர் | திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை !

பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி. பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 10 சவரன் […]

அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் !

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையின் போது இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அஜித்குமார் மரணம் தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் 5 போலீசார் […]