இன்ஃபிளுன்சர்: ஒரு பிரமிக்க வைக்கும் இங்கிலாந்து திரைப்படம்.
இன்ஃபிளுன்சர் ஒரு முழு நீள ஆங்கில மொழி திகில் திரைப்படமாகும், இது இங்கிலாந்தில் இருந்து உருவாக்கப்பட்டு, பரபரப்பான மற்றும் ஆர்வமூட்டும் கதையை வழங்குகிறது. இந்தக் கதை, பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில், இலங்கையின் பழமையான திகில் கதைகளை ஆராய பயணிக்கும் ஒரு தம்பதியினரைப் பற்றியது. ஆனால், அவர்களின் பயணம் அடர்ந்த காட்டில் சிக்கிக்கொள்ளும்போது, பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள், உண்மையான திகில் புராணங்களில் இல்லாமல், மனித இயல்பின் இருளில் இருப்பதைக் கண்டறிகின்றனர். […]
நெல்லையில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாருக்கு அருவால் வெட்டு !
நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாப்பாகுடியில் நேற்று இரவு 11 மணியளவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்போது ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் சம்பவ இடத்திற்கு இடத்திற்கு சென்று, மோதலில் ஈட்பட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது 17 வயது சிறுவன் காவலர்களை […]
தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், […]
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது !
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 14பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையும் அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளனர். காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் விசாரணைக்குப் பிறகு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் […]
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை குற்றவாளி ராஜுவுக்கு நாட்கள் காவல் விசாரணை -போக்சோ நீதிமன்றம்!
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், 14 நாட்களுக்கு பின் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு […]
உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் -17 பேர் உயிரிழப்பு !
உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று ஆயிரத்து 252வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி தோல்வியடைந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா […]
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு !
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 1.15 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து […]
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம்!
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். […]
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு -தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி – மத பாகுபாடுகளுடன் நடந்துகொள்கிறார் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். இதனையடுத்து நீதிபதி சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பு விராணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதனின் […]
நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை !
நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர்-செல்வி தம்பதியினரின் மகன் கவின். இவர், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த இளைஞர் நெல்லை கேடிசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளி தோழியுடன் பழகி வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. […]