விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசை கண்டித்து அறிக்கை – பிரேமலதா விஜயகாந்த் !

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதைக் கண்டித்தும், தர்பூசணி பழங்களில் சாயம் கலந்ததாகக் குழப்பத்தை ஏற்படுத்தியதைக் கண்டித்து சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டவுள்ளார். அந்த அறிக்கையில்,”விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தால் […]

தங்கம் விலை அதிரடி குறைவு – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 67 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை […]

மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் – பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு !

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் மறைந்த மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கது என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து,அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் மறைந்த மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் நேற்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு […]

கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் 29 பந்தில் 60 ரன்களும், ரகுவன்ஷி […]

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை !

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது என்றும் இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றூம் இதனால், கோயில் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு நிதி ஒதுக்கியது என்றும் இந்த நிதி முறையாக […]

மாநிலங்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா !

மக்களவையைத் தொடர்ந்து, கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிராக 232 […]

இன்று ..கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதல் !

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாதை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாதை எதிர்கொள்கிறது. ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் […]

“தமிழில் மட்டுமே பெயர் பலகை வைக்க வேண்டும்” – திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி !

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி – கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும். […]

3000தாண்டிய உயிரிழப்பு – மியான்மர் நிலநடுக்கம் !

மியான்மர் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்ததுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் […]

ஒரே கிராமத்தை சேர்ந்த 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், குழந்தைகள் முதல் பள்ளி மாணவர்கள் வரை 50-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்தக் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். தங்கள் கிராமத்தில் முகாம் அமைத்து […]