இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியம் – வீரமுத்துவேல் !
இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என, இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் – 3 திட்ட இயக்குனருமான டாக்டர் ப.வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது விண்வெளித்துறையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்றும் மாணவர்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள […]
தமிழகம் முழுவதும் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை துவக்கம் !
தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. டிஜிட்டல் வாயிலாகவும் தங்களது பதிவுகளை பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முதல்முறை வாக்காளர்கள் யாவரும் இந்த உறுப்பினர் சேர்க்கையில் இணையும் வசதி உண்டு. 2026 தேர்தல் பணிகளை தற்போது தேமுதிக உறுப்பினர் சேர்க்கையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து, பல்வேறு கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருகின்றது.மேலும், தற்போது இந்த உறுப்பினர் சேர்க்கையும் மக்கள் மத்தியில் நல்ல […]
பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு !
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை, ராம நவமி தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கையெழுத்தையாவது தமிழ் மொழியில் போடக்கூடாதா?” எனக் […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு !
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சென்றிருந்த பிரதமர் மோடி கொழும்பிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டின் அதிபர்அநுரா குமார திசநாயகேவை சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்னைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சு நடத்தினார். அதுமட்டுமின்றி, மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்தார். இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார். […]
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை முதல் […]
அம்பத்தூரில் மாடு முட்டி முதியவர் காயம் – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு !
அம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை அம்பத்தூர் பிரித்திவிப்பாக்கம் பிரதான சாலை அப்பர் கெனால் தெரு அருகே சாலையில் சுற்றித்திரிந்த பசுமாட்டிற்கு பெண்மணி ஒருவர் தண்ணீர் வைத்த நிலையில், தண்ணீரை குடித்துவிட்டு சாலையில் நடந்து சென்ற முனுசாமி என்பவரை தூக்கி வீசியுள்ளது. இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் பொற்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என […]
சண்முக பாண்டியனின் “கொம்பு சீவி” படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகும்- படக்குழு அறிவிப்பு !
“கொம்பு சீவி” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மறைந்த தேமுதிக நிறுவுனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் இளையமகன் ஆனா சண்முக பாண்டியன் ‘மதுர வீரன், படை தலைவன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, தற்போது “கொம்புசீவி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன், சீமராஜா போன்ற நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை […]
FICCI-யின் இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் நியமனம் !
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் (தலைவர் & நிர்வாக இயக்குநர், இந்திரா ப்ராஜெக்ட்ஸ், சென்னை)தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் வணிக உச்சிமாநாடுகள் மற்றும் முதன்மையான தொழில் நிகழ்வுகளில் இவர் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – உச்சநீதிமன்றம் தள்ளுபடி !
13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செப் அறக்கட்டளை சார்பில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நம் நாட்டில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை கட்டுப்பாடின்றி அணுக முடிவதால், அவை குழந்தைகளிடம் முன்னெப்போதும் இல்லாத மனநல நெருக்கடியை ஏற்படுத்துகிறது […]
பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை !
பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப் துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்த அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். […]