ஏப்ரல் 23 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் ஏப்ரல் 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

உலக பாரம்பரிய தினம் மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களுக்கு இன்று இலவச அனுமதி !

உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படுகிறது. உலகில் உள்ள பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. நுழைவுக் […]

அச்சத்தோடு இருக்கும் பெண்களை ஆதரிக்க பிறந்தவள் பிரேமலதா விஜயகாந்த் – தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழாரம் !

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்திய அரசியளிலும் அசைக்க முடியாத பெண் சக்தி பிரேமலதா விஜயகாந்த் என தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை கண்ணன் ஐய்யா அவர்கள் இந்திய இலக்கிய வரலாற்றில் தமிழ்க்கடல், பேச்சாளர் , பட்டிமன்ற நடுவர் போன்ற பல்வேறு புகழுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர்.இவர் 2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக மேலப்பாளையத்தில் (திருநெல்வேலி) ,நடைபெற்ற மாநாட்டில் பேசி […]

உலக சுகாதார உச்சி மாநாட்டை கலக்கி வரும் தமிழக இளைஞர் ஹரிச்சந்திரன் !

புது தில்லியில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டத்தில் அடிமட்ட மக்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்நாட்டின் ஹரிச்சந்திரன் செயல்பட்டு வருகிறார். உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டம் 2025 வருகின்ற ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், உலகளாவிய மற்றும் தேசியத் தலைவர்களை ஒன்றிணைத்து, மிகவும் அவசரமான சுகாதார சவால்களில் ஒன்றை குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான […]

நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல் !

நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி சற்றுமுன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,”கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் வரும் மே 19ஆம் தேதி மீண்டும் நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப […]

ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் !

ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 4.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளன.நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகரமான டெல்லி உள்பட வட இந்தியாவின் […]

திருச்சியில் மூதாட்டியிடம் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது !

திருச்சியில் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை இரண்டு பெண்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்துகிறது . திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெரியம்மாள்.இவர் இன்று மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசு பேருந்தில் மணப்பாறைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் இருந்த இரண்டு பெண்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துள்ளனர். இதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட திருடிய இரண்டு பெண்கள் தப்பிக்க […]

மதுரை | பிரபல தொழிலதிபர் கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ள 6 பேர் கைது !

மதுரையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் ஆறு பேரை மதுரை போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர். மதுரையில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர் சுந்தர்.இவர் கடந்த 14 ஆம் தேதி கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தொழிலதிபரை தேடி வருகின்றனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் 9 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர். அதில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மரியராஜ் உட்பட 6 பேரை கைது செய்து மதுரை […]

கவனம் பெற்று வரும் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை !

தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் மக்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. டிஜிட்டல் வாயிலாகவும் தங்களது பதிவுகளை பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த உறுப்பினர் சேர்க்கை இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, முதல்முறை வாக்காளர்கள்,பெண்கள் மற்றும் இளைஞர்கள் யாவரும் உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026 தேர்தல் பணிகளை தற்போது தேமுதிக உறுப்பினர் சேர்க்கை துவங்கிய ஒரு […]

கோவையில் சித்திரை திருநாளை முன்னிட்டு ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு !

தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 பிரபலமான ஜோதிடரும், வாஸ்து நிபுணருமான ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தின் நிறுவனர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலை அமைந்துள்ள, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அருகில் பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ள ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தில் சித்திரை திருநாளை முன்னிட்டு, தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைப்பற்றி தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 பிரபலமான […]