உலக பூமி தினத்தை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை !
உலக பூமி தினம் (ஏப்ரல் 22 ) முன்னிட்டு சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ”இன்று உலக பூமி தினம். இந்த பூமி நம் அனைவரையும் தாங்கி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனை கோடி மக்களின் வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. இன்றைக்கு நாம் காணும் நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு, எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிப்பது, குளங்களில் சாக்கடை நீர் கலப்பது, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன நீர் போன்றவை […]
ஸ்பேஸ் டாக்கிங் இணைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செய்துமுடித்தது ‘இஸ்ரோ’ !
ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் கீழ், விண்வெளியில் இரண்டாவது முறையாக செயற்கைக்கோள்களை, ‘இஸ்ரோ’ வெற்றிகரமாக இணைத்துள்ளது. வரும் 2035ம் ஆண்டுக்குள், விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக, ‘ஸ்பேடெக்ஸ்’ என்ற திட்டத்தில், விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்து விடுவிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இரண்டு செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி., சி — 60 ராக்கெட் வாயிலாக, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் […]
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் வினாவுக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் !
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவுக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்,பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்வியில்,கூற்று – ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார் என ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு காரணம் – […]
தொடர்ந்து உச்சத்தை தொட்டு வரும் தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி !
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இரக்கத்தை தொட்டு வருகிறது.அந்த வகையில், கடந்த சிலநாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,015-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1 […]
கத்தோலிக்க திருச்சபை திருத்தந்தை போப் பிரான்சிஸ் காலமானார் !
கத்தோலிக்க திருச்சபை தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ்.இவர் கடந்த மாதம் 14 அம் தேதி, உடல்நலக்குறைவால் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் போப் பிரான்சிஸுக்கு 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. 38 நாள்களுக்குப் […]
ஜம்மு-காஷ்மீர் |செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளபெருகில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு !
ஜம்மு-காஷ்மீரில் தரம்குண்ட் என்ற கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது.மேலும், 30 வீடுகள் சேதமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதிக்கு அருகில் இருந்த தரம்குண்ட் என்ற கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது.மேலும், 30 வீடுகள் சேதமடைந்தனர் . மேலும், கனமழை காரணமாக பாக்னா கிராமத்தில் வீடு […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி அதிகரிக்க கூடும் – சென்னை வானிலை மையம்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் […]
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி அதிரடி வெற்றி !
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிபெற்றது. நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய லக்னோ, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் […]
ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு வேளாங்கண்ணியில் கொண்டாட்டம் !
ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு பிரார்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தலமாக வேளாங்கண்ணி தேவாலயத்தில், அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று மெழுகுவர்த்திகளை கையில் […]
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் !
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி என்ற முதியவர், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதால், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. […]