தைவான் நாட்டில் நிலநடுக்கம் அதிர்ச்சியில் மக்கள் !

தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தி கட்டிடங்கள் அதிர்ந்ததில் மக்கள் அச்சமடைந்தனர். தைவான் நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரை நகரான இலன் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலன் நகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் 69 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சில விநாடிகள் அதிர்ந்தன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு […]

சிறப்பாக பணியாற்றி வரும் காவல் துறை நண்பர்களுக்கு பாராட்டு !

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டி தற்போது,அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை,கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் பல்வேறு தரப்பினரும் காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில்,தற்போது காவல்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.குற்ற செயல்களில் ஈடுபட்டும் குற்றவாளிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்துவருகின்றனர். இந்தநிலையில்,இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரா.சீனிவாச பெருமாள்( SP ) அவர்களால் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் […]

‘ஜிப்லி புகைப்படத்தால் தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம்’-சைபர் குற்றப் பிரிவு எச்சரிக்கை !

ஜிப்லி புகைப்படங்களை பயண்படுத்தி தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு எச்சரித்துள்ளது. இது குறித்து சைபர் குற்றப் பிரிவு வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கையில், ஒரு பயனாளர், தான் எடுத்த செல்ஃபி அல்லது புகைப்படம், குழுப் புகைப்படங்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் பதிவிட்டு, அதிலிருந்து ஜிப்லி புகைப்படங்களை பெறுகிறார். ஆனால், ஜிப்லி புகைப்படத்தைச் சுற்றி இருக்கும் அச்சுறுத்தல்களை பயனாளர்கள் மறந்துவிடுகிறார்கள் எனவும், ஒரு பயனாளர், செய்யறிவு தொழில்நுட்பத்தில், தனது புகைப்படத்தைப் பதிவு செய்யும்போது, அது […]

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் !

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், வயது மூப்பு காரணமாக காலமானார். 93 வயதான குமரி அனந்தன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்த பெருமைக்கு சொந்தக்காரர். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் அவர் பதவி […]

வக்ஃப் திருத்த சட்டத்தால் வன்முறை களமாக மாறிய மேற்குவங்கம் !

மேற்குவங்கத்தில் வக்ஃப்திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியதையடுத்து, இத இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்குவங்க மாநிலம், ஜான்கிபூரில் ஏராளமானோர் வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. அப்பொய்ஜி போராட்டக்காரர்கள்,ஒரு கட்டத்தில் காவல் துறையின் வாகனத்தை கவிழ்த்து […]

16 வயதுக்குட்டப்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தடை – அதிரடி காட்டும் மெட்டா !

பெற்றோர் அனுமதி வழங்காவிட்டால், 16 வயதுக்குட்டப்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ் அப், த்ரெட் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் இயங்குகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் மெட்டா செயலிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருகின்றனர். அந்த வகையில் தற்போது 16 வயதுக்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் நிர்வாணத்தை நேரடியாக ஒளிபரப்பவோ அல்லது மங்கலாக்கவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் கீழ், பெற்றோர் அனுமதி வழங்காவிட்டால், 16 வயதுக்குட்டப்பட்டவர்கள் […]

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்க்ஸ்-சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதல் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்பில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்க்ஸ்-சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி முதலாவது ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது ஆட்டத்தில் […]

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – இன்று முதல் அமல் !

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில்,சமையல் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச் […]

10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

”ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது” என தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வாருகின்றார். மேலும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக ஆளுநர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் […]

லக்னோவில் வெஜ் பிரியாணிக்கு பதில் அசைவ பிரியாணி – உணவக உரிமையாளர் கைது !

லக்னோவில் வெஜ் பிரியாணி ஆடர் செய்த பெண்ணுக்கு மாறாக அசைவ பிரியாணி அனுப்பி வைத்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி பண்டிக்கை வரும் ஏப்ரல் மாதம் 7 தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக பலரும் விரதம் இருந்து கடவுள் வழிபாடு செய்து வருவது வழக்கம். வட இந்திய மாநிலங்களில் இவ்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் தான், உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் வசிக்கும் […]