தமிழ்நாடு | நேற்று நள்ளிரவில் இருந்து மீன் பிடி தடைக்கலாம் அமல் !

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்களின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் […]

பாலியல் விவகாரம் | கோவையில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் அதிரடி கைது !

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ். கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வரும் ஜான் ஜெபராஜ் மத போதகராகவும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 […]

திருவண்ணாமலையில் அரசு பேருந்தும் கரும் நேருக்கு நேர் மோதி 4 பேர் உயிரிழப்பு !

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதேசமயம் பாண்டிச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கைலாஷ், சதீஷ்குமார், சாருஷ் ஆகியோர் பெங்களூரில் லாரி உரிமையாளர் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பாண்டிச்சேரி நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, […]

ஈரோட்டில் பாட்டி பேரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு !

சத்தியமங்கலம் அருகே பாட்டியும், பேரனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தொட்டகாஜனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா, அவரது மனைவி தொட்டம்மா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகன் ராகவன் சூசையபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், ராகவன் தனது வீட்டை ஒட்டியுள்ள பாட்டி சிக்கமா வீட்டில் இரவு நேரத்தில் அவ்வப்போது உறங்கச் செல்வது வழக்கம். […]

“மோசடி முதலீட்டு வலைத்தளங்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரபலங்கள் பற்றிய பரபரப்பான தலைப்புச் செய்திகள் மற்றும் நன்கு அறியப்பட்ட செய்தி […]

டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயலால் மக்கள் அதிர்ச்சி !

டெல்லியில் திடீரென வானிலை மாற்றமாகி புழுதிப்புயல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதுடன், பல விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. புழுதிப்புயலுடன் சேர்த்து லேசான மழையும் பெய்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பலத்த காற்றும் வீசியதால் இரவு 9 மணிவரை […]

“6 மாதம் தே.மு.தி.க வளர்ச்சி பணியில் கவனம் செலுத்த உள்ளோம்”- பிரேமலதா விஜகாந்த் !

தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது.அந்த வகையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிட போவதாக, சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா நேற்று அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் […]

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி – அதிரடி காட்டும் மாடுபிடி வீரர்கள் !

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். விறுவிறுப்பாக […]

விருதுநகர்| ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்து விபத்து !

விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென பெண் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்குனி பொங்கலையொட்டி, விருதுநகரில் தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பொருட்காட்சிக்கு சென்ற கவுசல்யா என்பவர் அங்குள்ள ராட்டினத்தில் சுற்றியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, கவுசல்யா திடீரென தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவரை பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மீட்டு பொருட்காட்சியில் தயார் நிலையில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராட்டினம் […]

கன்னியாகுமரி | மரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து !

திருவட்டாறு அருகே மரம் பாரம் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இருந்து கோவில்பட்டிக்கு மரம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி திருவட்டார் பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள ஓர்க்சாப் மற்றும் கடைகளின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கடையின் முன் பகுதியில் விடபட்டிருந்த நான்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் உட்பட […]