முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் !

சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க. முத்து இன்று காலை 8 மணியளவில் காலமானார். மு.க. முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனிடையே, மு.க.முத்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கத்தில் […]

உக்ரைன் மீது 300 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் ..ஒருவர் பலி!

உக்ரைன் மீது 30 ஏவுகணைகள், 300 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார். உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 241வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், […]

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு !

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியின் தெளிவான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமியை மா்மநபா் பின் தொடா்ந்து சென்று கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், குற்றவாளியைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, குற்றவாளி […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு நரம்பு நோய்!

அதிபர் ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு Chronic Venous Insufficiency எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இந்த நோய், கால்களில் உள்ள நரம்புகளில் ரத்தம் தேங்குவதால், நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது என்றும், இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் […]

தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் நிதி, மொழி, கல்வி உரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமைக்காகவும் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும் என்று, திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் எந்தவிதமான விவாதங்களை எழுப்ப […]

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் செல்வதை தடுத்தால் வழக்கு பதிவு செய்யவேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !

கோயிலுக்குள் செல்வதை சாதி அடிப்படையில் எவரேனும் தடுத்தால் அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் அய்யனார் கோயிலில் பட்டியலினத்தவர் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வெங்கடேசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்; அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளி விட்டனர் என்றும், கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய […]

கோவையில் உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது !

கோவையில் தனியார் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரித்து வரும் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிரது. இக்கோவிலில் வருவாய்ப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.இந்நிலையில், நிதி மேலாண்மை முறையாக இல்லை என்பதால் இந்த கோவிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என […]

திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார்!

திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார். 1989-ம் ஆண்டில் வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வேலு பிரபாகரன். இதைத்தொடர்ந்து சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், பிரபு நடித்த உத்தமராசா, மோகன் நடித்த உருவம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். பின்னர், அசுரன், கடவுள், புதிய ஆட்சி, புரட்சிக்காரன் போன்ற சமூகம் சார்ந்த கருத்துகள் நிறைந்த படத்தையும் இயக்கி நற்பெயரை எடுத்துள்ளார். 68 வயதான வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட […]

ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா தோற்கடித்தார். ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டி அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வெகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது சுற்றில் இந்தியாவின் 19 வயதே ஆன இளம் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் விளையாடிய பிரக்ஞானந்தா […]

45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் -தமிழக அரசு அரசாணை வெளியீடு !

தமிழ்நாட்டில் உள்ள 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி ஒதுக்கி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 50 அரசு மருத்துவமனைகளில் சுமார் ரூ.160 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார். அதனடிப்படையில் முதல்கட்டமாக 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. இதில், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் ஆகிய உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் […]