வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் !
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி என்ற முதியவர், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதால், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. […]
திருப்பத்தூர் | பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு !
பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தபேதர் முத்துசாமி தெருவைச் சேர்ந்த பாபு . இவரது மகன் ஆர்யா இவருக்கு வயது பன்னிரெண்டுஆர்யா, பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் ஆர்யா தனது சொந்த ஊரில் உள்ள தனது நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள செல்லா குட்டை ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த […]
சென்னையில் அரசு பேருந்து மோதி ஐ.டி ஊழியர் உயிரிழப்பு !
தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் ஐ.டி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐ.டி ஊழியரான மதியழகன். இவர், கூடுவாஞ்சேரியில் தனது நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்,நேற்று இரவு தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சிகனல் அருகே தனது பைக்கில் மதியழகன் சென்று கொண்டிருந்த போது தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மதியழகன் மீது […]
விஜய பிரபாகரனை எதிர்பார்க்கும் தமிழக மக்கள் ..!
தமிழ் நாட்டின் அரசியல் தற்போது உள்ள சூழலில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு இளைஞராக விஜயபிரபாகரன் திகழ்ந்து வருகிறார் 2005 அரசியலில் தனது பயணத்தை துவங்கிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை தமிழகத்தில் தொடங்கினார்.தொடர்ந்து 15 வருடங்களாக எதிர்கட்சிகளுக்கு பெரிய சவாலாக திகழ்ந்தார் . அதுமட்டுமின்றி,தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களில் அறிவிப்புகளும் ,நலத்திட்ட பணிகளும் ,அவரது செயல்பாடுகளும் மக்களால் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.2011 ஆம் ஆண்டு அனைத்திந்திய […]
ஏப்ரல் 23 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் ஏப்ரல் 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]
உலக பாரம்பரிய தினம் மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களுக்கு இன்று இலவச அனுமதி !
உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படுகிறது. உலகில் உள்ள பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. நுழைவுக் […]
அச்சத்தோடு இருக்கும் பெண்களை ஆதரிக்க பிறந்தவள் பிரேமலதா விஜயகாந்த் – தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழாரம் !
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்திய அரசியளிலும் அசைக்க முடியாத பெண் சக்தி பிரேமலதா விஜயகாந்த் என தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை கண்ணன் ஐய்யா அவர்கள் இந்திய இலக்கிய வரலாற்றில் தமிழ்க்கடல், பேச்சாளர் , பட்டிமன்ற நடுவர் போன்ற பல்வேறு புகழுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர்.இவர் 2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக மேலப்பாளையத்தில் (திருநெல்வேலி) ,நடைபெற்ற மாநாட்டில் பேசி […]
உலக சுகாதார உச்சி மாநாட்டை கலக்கி வரும் தமிழக இளைஞர் ஹரிச்சந்திரன் !
புது தில்லியில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டத்தில் அடிமட்ட மக்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்நாட்டின் ஹரிச்சந்திரன் செயல்பட்டு வருகிறார். உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டம் 2025 வருகின்ற ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், உலகளாவிய மற்றும் தேசியத் தலைவர்களை ஒன்றிணைத்து, மிகவும் அவசரமான சுகாதார சவால்களில் ஒன்றை குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான […]
நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல் !
நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி சற்றுமுன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,”கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் வரும் மே 19ஆம் தேதி மீண்டும் நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப […]
ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் !
ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 4.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளன.நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகரமான டெல்லி உள்பட வட இந்தியாவின் […]