முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு -விவசாயிகள் மகிழ்ச்சி!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து124 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில், முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா – தமிழக மேற்கு தொடர்ச்சி […]
அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் – மலைவாழ் மக்கள் கோரிக்கை!
அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் என, கொடைக்கானல் தோடர் இன மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 62வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கொடைக்கானல் பூம்பாறை சஷ்டி புகழ் சார்பாக மலைவாழ் மக்களின் தோடர் நடனம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் இந்த நடனத்தை, தங்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆடி வருகின்றனர். ஆடி மாதங்களில் நடவு செய்து விவசாயத்தில் ஈடுபடும்போது இந்த நடனத்தை அவர்கள் ஆடுவது […]
கொச்சியில் நடைபெற்ற சரக்குக் கப்பல் விபத்து பேரிடராக அறிவிப்பு -கேரள அரசு!
கொச்சி அருகே, சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது. லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று கடந்த 25ம் தேதி விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்தபோது கடலில் மூழ்கத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, கப்பலில் ஏற்றிவந்த 367 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84 மெட்ரிக் டன் […]
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகள் நிலயமானம் -திரவுபதி முர்மு உத்தரவு !
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்றத் நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் அமைப்பு கடந்த 26-ம் தேதி பரிந்துரை செய்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு செய்த இந்தப் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் […]
மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் -பிரேமலதா விஜயகாந்த்!
‘மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறிய அவர், சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக […]
கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வுமையம்!
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென் மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை […]
“மகளிர் உரிமை தொகை கொடுத்துவிட்டு டாஸ்மார்க் மூலமாக எடுத்து கொள்கிறது தமிழ்நாடு அரசு” – பிரேமலதா விஜயகாந்த் குற்றசாட்டு !
மகளிர் உரிமைத்தொகை என ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் டாஸ்மார்க் மூலமாக 5000 ரூபாய் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு என பிரேமலதா விஜயகாந்த் குற்றம சாட்டியுள்ளார் . தேமுதிக சார்பில் மது ஒழிப்பு பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நகர செயலாளர் பரமஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிகபொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசியவர்,ஆப்ரேஷன் செந்தூரில் பாகிஸ்தானை விரட்டிய ராணுவத்தினருக்கு நான் மிகப்பெரிய […]
மேட்டுப்பாளையம்|தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டி யானை -தாயிடமே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் !
மேட்டுப்பாளையம் அருகே, தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை, தாயிடமே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானி சாகர் நீர்த்தேக்க பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது தாயை பிரிந்த நிலையில் யானை குட்டியை பார்த்து மீட்டனர். மீட்கப்பட்ட யானைக்கு ஒன்பது மாதமே இருக்கும் என்ற நிலையில் அந்த குட்டியை அதன் தாயுடன் சேர்த்து வைக்க தாய் யானை கூட்டத்தை சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக […]
சூடானில் வேகமாகப் பரவி வரும் காலரா -172 பேர் உயிரிழப்பு !
சூடானில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயால் கடந்த ஒருவாரத்தில் 172 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காலரா நோய் சூடான் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய காலரா தொற்று காரணமாக க்டந்த ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டுள்ளது.தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின. இதேபோல் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் […]
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு |5 மாதங்களில் தீர்ப்பு -சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கபட்டத்து. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஞானசேகரனுக்கு திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்குகளிலும் ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஞானசேகரனின் கூட்டாளிகள் சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த குணால் […]