இடுக்கி | இறகு நீர்வீழ்ச்சியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இளைஞர் மீட்பு !

இடுக்கியில் இறகு நீர்வீழ்ச்சியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இறகு நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். அப்போது, அங்கிருந்த பாறையின் இடையே இளைஞர் மாட்டிக்கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் கயிற்றின் உதவியுடன் அந்த இளைஞரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். கரைக்கு மீட்கப்பட்ட இளைஞர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் , கேரளாவிற்கு சுற்றுலா வந்ததும் […]

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் -இணைய சேவை துண்டிக்கப்பட்டு,144 தடை உத்தரவு !

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பாடு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி சமுதாய மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மிகப்பெரிய வன்முறை வெடித்து 260 பேர் பலியாகினர். அடுத்தடுத்த கிளர்ச்சிகளால், மாநிலத்தில் அமைதி குலைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பிரண் சிங் ராஜிநாமா செய்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில் மணிப்பூர் […]

கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு !

கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுல் உர்பெல் டர்பே அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், தலைநகர் பொகொடாவில் நேற்று நடந்த பிரசார நிகழ்ச்சியில் மிகுல் உர்பெல் பங்கேற்றார். அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவரது முதுகு […]

திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் உயிரிழப்பு !

நெல்லை மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்தாள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பதிவு செய்து ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இன்று முதல் நாளாக திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணிக்கு சென்றுள்ளார். அப்போது அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பை சரி செய்வதற்காக சுடலைமணி இறங்கியபோது […]

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு !

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில், 221 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று வராமல் தடுக்க கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கர்ப்பிணிகள், உடல்வலி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடி சிகிச்சை […]

தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி !

வளர்ச்சியடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என்றும், நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது என்றும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு […]

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கனடா அரசு!

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் 17 ம் தேதி வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது, மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள […]

இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் உள்ளனர் -தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம்!

புரட்சியாளர் அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில், விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள மிகப்பழைமை வாய்ந்த கிரேஸ் – இன் – வழக்குரைஞா் மையத்தில் புரட்சியாளர் அம்பேத்கா் 1922-ம் ஆண்டு பாரிஸ்டா் பட்டம் பெற்றார். அதை நினைவுகூறும் வகையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பங்கேற்றுப் பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் […]

இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா தொற்று பாதிப்பு !

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் கொரனோ பெருந்தொற்று சுமார் 3 ஆண்டுகளுக்கு நாட்டையே நிலைகுலையச் செய்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலத்தில் […]

சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில் ஒப்பந்தம் !

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ.1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் அன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ […]