நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம் !

கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியார் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை […]

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் உயிரிழப்பு !

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 21 பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் உள்ள ஒரு முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். […]

இந்தியாவில் கடந்த 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து !

தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏர் இந்தியாவின் AI – 143 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. டெல்லி […]

விமான நிலையம் அருகில் லேசர் ஒளியைப் எழுப்பக்கூடாது – சென்னை விமான நிலையம் அதிரடி!

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் ஒளியைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த சில விமானங்களின் மீது சமீபகாலமாக இரவு நேரத்தில் பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிகழ்வு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து விமான நிலைய நிர்வாகமும், விமான நிலைய பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனிடையே சென்னை விமான […]

வெடித்துச் சிதறிய இந்தோனேசியாவில் லெவோடொபி லகி-லகி எரிமலை – அதிர்ச்சியில் மக்கள் !

இந்தோனேசியாவில் லெவோடொபி லகி-லகி எரிமலை வெடித்துச் சிதறி வருவதால் சுற்றியுள்ள மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அதன்படி நுசா தெங்காரா மாகாணத்தின் புளோரஸ் தீவில் லெவோடோபி லக்கி லக்கி என்ற எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை நேற்று தொடர்ந்து 3 முறை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை […]

ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி !

ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம் என உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த […]

திருப்பத்தூர் | தனியார் கல்குவாரிக்கு அபராதம் விதித்த தேவகோட்டை சார் ஆட்சியர்!

திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட மல்லாக்கோட்டை தனியார் கல்குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சார் ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மல்லாக்கோட்டை தனியார் கல் குவாரியில் கடந்த மாதம் 20 ம் தேதி, 400 அடி ஆழப் பள்ளத்தில் விதிகளை மீறி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக துளையிடும் பணி நடைபெற்றது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]

அரசு தொலைக்காட்சி நிலையத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு !

ஈரானில், செய்தி நேரலையின்போது அரசு தொலைக்காட்சி நிலையத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று இரவு, இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் கடும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதல் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது நிகழ்ந்தது. வெடிப்புச் சம்பவமும், நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் மேடையில் இருந்து இறங்கி பாதுகாப்புக்காக வெளியேறினார். தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் இடிந்து […]

காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு !

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானி, மொடக்குறிச்சி கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் உத்தரவுப்படி, காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதனை, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் […]

2 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் […]