அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி!
சிட்லபாக்கம் அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு, அங்குள்ள காவலாளி, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சிட்லப்பாக்கத்தில் செயல்படும் அரசு பெண்கள் காப்பகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். தந்தை இழந்த நிலையில், 8ம் வகுப்புப் படித்து வரும் அவர், காலில் காயங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையின் விசாரணையில், இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த காவலாளி தன்னிடம் தகாத முறையில் […]
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு !
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில், திமுக சார்பில் […]
எலான் மஸ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ள அதிபர் டிரம்ப் !
ஜனநாயக கட்சியினருக்கு எலான் மஸ்க் நிதியுதவி அளித்து ஆதரவு தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு முழு ஆதரவாக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் […]
கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் -நேற்று ஒரு நாளில் 1.66 லட்சம் பேர் பயணம் !
கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று மட்டும் 1.66 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சனிக்கிழமை பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்பட்டதால், வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல தொடங்கியிருந்தனர். இந்நிலையில் ஜூன் 4 முதல் ஜூன் […]
இடுக்கி | இறகு நீர்வீழ்ச்சியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இளைஞர் மீட்பு !
இடுக்கியில் இறகு நீர்வீழ்ச்சியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இறகு நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். அப்போது, அங்கிருந்த பாறையின் இடையே இளைஞர் மாட்டிக்கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் கயிற்றின் உதவியுடன் அந்த இளைஞரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். கரைக்கு மீட்கப்பட்ட இளைஞர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் , கேரளாவிற்கு சுற்றுலா வந்ததும் […]
மணிப்பூரில் மீண்டும் பதற்றம் -இணைய சேவை துண்டிக்கப்பட்டு,144 தடை உத்தரவு !
மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பாடு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி சமுதாய மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மிகப்பெரிய வன்முறை வெடித்து 260 பேர் பலியாகினர். அடுத்தடுத்த கிளர்ச்சிகளால், மாநிலத்தில் அமைதி குலைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பிரண் சிங் ராஜிநாமா செய்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில் மணிப்பூர் […]
கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு !
கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுல் உர்பெல் டர்பே அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், தலைநகர் பொகொடாவில் நேற்று நடந்த பிரசார நிகழ்ச்சியில் மிகுல் உர்பெல் பங்கேற்றார். அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவரது முதுகு […]
திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் உயிரிழப்பு !
நெல்லை மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்தாள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பதிவு செய்து ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இன்று முதல் நாளாக திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணிக்கு சென்றுள்ளார். அப்போது அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பை சரி செய்வதற்காக சுடலைமணி இறங்கியபோது […]
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு !
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில், 221 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று வராமல் தடுக்க கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கர்ப்பிணிகள், உடல்வலி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடி சிகிச்சை […]
தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி !
வளர்ச்சியடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என்றும், நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது என்றும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு […]