திருப்பத்தூர் | தனியார் கல்குவாரிக்கு அபராதம் விதித்த தேவகோட்டை சார் ஆட்சியர்!

திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட மல்லாக்கோட்டை தனியார் கல்குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சார் ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மல்லாக்கோட்டை தனியார் கல் குவாரியில் கடந்த மாதம் 20 ம் தேதி, 400 அடி ஆழப் பள்ளத்தில் விதிகளை மீறி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக துளையிடும் பணி நடைபெற்றது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]

அரசு தொலைக்காட்சி நிலையத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு !

ஈரானில், செய்தி நேரலையின்போது அரசு தொலைக்காட்சி நிலையத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று இரவு, இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் கடும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதல் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது நிகழ்ந்தது. வெடிப்புச் சம்பவமும், நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் மேடையில் இருந்து இறங்கி பாதுகாப்புக்காக வெளியேறினார். தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் இடிந்து […]

காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு !

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானி, மொடக்குறிச்சி கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் உத்தரவுப்படி, காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதனை, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் […]

2 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் […]

பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் விருது வழங்கி கவுரவிப்பு !

பிரதமர் மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதல் கட்டமாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற அவர், தலைநகர் நிகோசியாவ்வுக்குச் சென்றடைந்தார். அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்த சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோ டவுலிட்ஸ் பிரதமர் மோடியை வரவேற்றார். அதைத் தொடர்ந்து லிமாசோலில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சைப்ரஸ் […]

மதராசி கேம்ப் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பெரும்பாலான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை முழுமையாகப் […]

ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் ஒருவர் பலி -5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிய மெட்ரோ நிர்வாகம்!

ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பூந்தமல்லி-போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை போரூர் டி.எல்.எப் – எல்&டி அருகே மெட்ரோ ரயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே ராட்சத ‘கர்டர்’ அமைக்கப்பட்டன. இந்த […]

அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஸ்வாஷ் குமார் பதைபதைக்கும் உரை !

விமானம் புறப்பட்ட 30 நொடிகளில் பயங்கர சத்தம் கேட்டதாகவும், பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியதாகவும் விமான விபத்தில் உயிர்தப்பிய விஸ்வாஷ் குமார் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, நேற்று 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, ‘ஏர் இந்தியா’ போயிங் 787 – டிரீம் லைனர் விமானம், 30 வினாடிகளில் கீழே விழுந்து வெடித்தது. 600 முதல் 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது […]

கோவில்பட்டி அருகே லார் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு !

கோவில்பட்டி அருகே லார் மீது கார் மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதியதியாக பணிபுரிந்து வரும் பூர்ன ஜெய ஆனந்த், நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர் குமார், காவலர் நவீன்குமார், ரெக்கார்டு கிளார்க் வாசு ராமசந்திரன், வழக்கறிஞர் தனஞ்செய ராமசந்திரன் ஆகியோர் திருச்செந்தூர் வந்து விட்டு, மீண்டும் தஞ்சாவூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் மதுரை பைபாஸ் ரோடு, கோவில்பட்டி […]

ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டதாக தகவல் – இஸ்ரேல் பாதுகாப்புத்துறை !

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள், உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது. ஈரான் ராணுவ நிலைகள் மீது […]