சிறப்பாக பணியாற்றி வரும் காவல் துறை நண்பர்களுக்கு பாராட்டு !

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டி தற்போது,அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை,கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் பல்வேறு தரப்பினரும் காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,தற்போது காவல்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.குற்ற செயல்களில் ஈடுபட்டும் குற்றவாளிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்துவருகின்றனர்.

இந்தநிலையில்,இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரா.சீனிவாச பெருமாள்( SP ) அவர்களால் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது .

அதில், தான் பெரிதும் நேசிக்கும் காவல் பணியை 30 வருடம் காவல் உதவி ஆய்வாளர் , காவல் ஆய்வாளர் , காவல் உதவி ஆணையர் என்று தனது கடமை தவறாது காவல்துறையில் எந்த வித களங்கமற்றவர் (UNBLIMISHED) என்று பணியாற்றி வரும் ஹரி குமார் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP ) அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்பித்துள்ளனர்.