சிவகங்கை கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு !

சிவகங்கை அருகே கல் குவாரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே, மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள தனியார் கல் குவாரியில் கடந்த 20ம் தேதி காலை 18 தொழிலாளர்கள் பாறையில் துளையிடும் பணியில் ஈடுட்டிருந்தனர்.
அப்போது, குவாரியின் மேற்பகுதியில் இருந்து ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் பாறைகளின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்துவந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஒடிசாவைச் சேர்ந்த பொக்லைன் டிரைவர் அர்ஜித் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இதில் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்த மைக்கேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.