வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்து -19 பேர் பலி !

வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம், கல்வி நிலைய வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் – 7 பிஜிஐ என்ற போர் விமானம், இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில், தலைநகரான டாக்காவிற்கு வடக்கே உள்ள உத்தரா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

மேலும், விமானம் உடனடியாக தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் பற்றிய தீயைக் கட்டுக்குள்கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே போர் விமானம் விழுந்த விபத்தில், பள்ளி மாணவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts