அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்க வேண்டும் -சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு !

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்களை விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த வெரோணிக்கா மேரி என்பவர் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியா், தனியார் கருத்தரித்தல் மையத்தை அணுகுகின்றனா் எனவும் தனியார் மையத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் செயற்கை கருத்தரித்தல் செய்யப்படுகிறது எனவும் இதனால், ஏழை மக்கள் செயற்கை கருத்தரித்தல் மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.
எனவே, குழந்தை இல்லாத தம்பதியரின் நலன் கருதி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையத்தை தொடங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாரிகள் தரப்பில், அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் தொடங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, ஏற்கெனவே அரசுத் தரப்பில் அளித்த உத்தரவின்படி, அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்களை விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.