இத்தாலி எட்ணா எரிமலை திடீர் வெடிப்பு -பதட்டத்தில் சுற்றுலா பயணிகள் !

இத்தாலியில் உள்ள எட்ணா எரிமலை வெடித்து சிதறியதால், அருகில் இருந்த சுற்றுலா பயணிகள் தலைதெறிக்க ஓடினர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

சுற்றுலா தளமாக இருக்கு இந்த எரிமலையை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

இந்நிலையில், எட்னா எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. இதன் விளைவாக கரும்புகை வெளியேறியதால் சாம்பல் மேகங்கள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் எரிமலையில் இருந்து உயிரை கையில் பிடித்து ஓடினர்.

எரிமலை வெடிப்பு தொடருவதால் பாதுகாப்பு கருதி அபாயகட்ட இடங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், சிசிலி தீவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். அதேவேளை, எரிமலை வெடிப்பு வழக்கமான ஒன்றுதான் என்றும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts