அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் – தமிழக அரசு அறிவிப்பு !

அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதி காண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதியில் நடைபெற்ற 2025 – 2026 மானியக் கோரிக்கையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு 9 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்புக் காலம், 2021, ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து ஓராண்டாக உயர்த்தப்பட்டது என்றும் தற்போதைய விதிகளின்படி, மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்றும் இதனால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்தில் முடிக்க இயலாமல், அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணி மூப்பினையும் பல்லாயிரக்கணக்கான இளம்மகளிர் அரசுப் பணியாளர்கள் இழக்கும் நிலை ஏற்படுகிறது என்றும் இனிவரும் காலங்களில், அரசுப் பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இதனை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மகப்பேறு விடுப்புக் காலத்தால், அரசு பெண் பணியாளர்களின் பதவி உயர்வோ, பணி மூப்போ பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply