பறையிசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு இன்று பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிப்பு !

பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, ஒன்றிய அரசு மொத்தம் ஏழு பத்ம விபூஷன் விருதுகளையும், 19 பத்ம பூஷன் விருதுகளையும், 113 பத்மஸ்ரீ விருதுகளையும் கலைஞர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்தது.

முதல் கட்டமாக, நடிகர் அஜித், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷன் உள்பட மொத்தம் 71 பேருக்கு ஏப்ரல் 28 அன்று விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று மாலை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், எஞ்சியுள்ள 68 விருத்தாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளைச் செய்த புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அந்த வகையில் பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் பத்ம பூஷன் விருதைப் பெற்றனர்.

இதேபோல், கண்ணப்பா சம்பந்தன், டாக்டர் நீர்ஜா பட்லா, மந்த கிருஷ்ண மடிகா, சையத் ஐனுல் ஹசன், சாந்த் ராம் தேஸ்வால் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts