70 லட்சம் மதிப்பிலான கஞ்சா போதை பொருட்களை தீயில் எரித்து அழிப்பு !

தாம்பரம் மாநகர காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 70 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழி க்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் ஜி.ஜே. மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் உள்ளது.
இங்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.

தாம்பரம் மாநகர ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரியின் தலைமையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் கஞ்சா அழிக்கும் பணிகள் நடைபெற்றது.
இதில் கடந்த ஆண்டு கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கண்ணகி நகர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 700 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு 70 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது