ராமநாதபுரத்தில் பெண்குழந்தை கழுத்தை அறுத்து கொலை -ஒருவர் கைது !

பரமக்குடி அருகே, இரண்டு வயது பெண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த எமனேஸ்வரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கறிஞராக உள்ளார்.

இவரது மனைவி டெய்சி. இவர்களது பெண் குழந்தை லெமோரியாவுக்கு இரண்டரை வயதாகிறது. இவர்களது உறவினர் வடிவேல் மகன் சஞ்சய், அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை குழந்தை லெமோரியாவை சஞ்சய் அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் பின்புறம் நகராட்சி கட்டணக்கழிப்பறை கட்டப்படும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்குள்ள துணி துவைக்கும் கல்லில் குழந்தையை படுக்க வைத்து கத்தியால் கழுத்தை அறுத்து தலையை துண்டித்துள்லார்.

அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில் உடலை மட்டும் விட்டு விட்டு தலையை அருகில் உள்ள ஊருணியில் கத்தியுடன் வீசியுள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், எமனேஸ்வரம் காவல்துறயினர் சஞ்சையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts